Monday, March 4, 2013

திணிப்பு






நான் நட்ட மல்லிகைகள் பூக்களுக்கு பதிலாக
முட்களை பிரசவித்து கொண்டிருக்க
காலமோ அதில் எனக்கொரு முள்முடி தயார் செய்கிறது.
என் தலையில் வழியும் ரத்தத்தை துடைக்க
கைகளை நீட்டுகிறேன்
சீழ் பிடித்ததாய் சிறை வைக்கப்படுகிறது அது.
எறும்பாய் பிறந்து விட்டு
வரிசையை மீறலாமா?
தலைகளை தொடர்ந்து போவதே விதியாய்
உயிர்ப்பினை தொலைத்தேன்
வெறுமையாய் நிற்கிறது என் வீடு.
எனக்கு அடுக்குமாடி தந்ததாய்
காலம் பெருமை பேச
தினந்தோறும் கனவில் வருகிறது
பச்சை பூந்தோட்டம் நடுவிலே சின்ன வீடு!

No comments:

Post a Comment