நான்....








என்னை உயிர்ப்போடு வைத்திருக்கும் என் அன்னையாம் தமிழுக்கு என் முதல் வணக்கம்! என்னை பற்றி சொல்ல பெரிதாக எதுவுமில்லை. பெண்மையில் தொடர்கதைப்பகுதியில் 2013 ஆம் ஆண்டு முதல் எழுதிவருகிறேன். கிடைத்தற்கரிய மேடையில் என் பரிசோதனை முயற்சிகளை அரங்கேற்ற ஆரம்பித்து ஓராண்டு கடந்து விட்டது! பரிசோதனை எனும்போதே வெற்றிகளை போலவே  தோல்விகளும் சாத்தியம் தான்! இதுவரை நீள்கிறதென் பாதை உன் விழி வழியே!, மீளாதோ என் வசந்தம், வரம் தேடும் தேவதை, தனிமையிலொரு தேவதை, உயிர் கொள்ளாயோ என் ஓவியமே ஆகியவற்றை நிறைவு செய்திருக்கிறேன். எழுத்துலகில் நான் பிறந்து ஒரு அகவையே கடந்திருப்பதால் உங்கள் கருத்துக்கள் மூலமாக சரியான பாதையில் நான் செல்ல ஆதரவை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். மகிழ்ச்சியான வாசிப்பனுபவம் கிட்டட்டும்! நன்றி !!!!!!!!! :)