பூமித்தரையை
கோடுகிழித்த அந்நாளில் தான்
என் கண்களில் உன் உருவப்பதிவு.
சொட்டும் நீர்த்திவலைகளாம்
உன் ஞாபகங்களால் தான்
இரவுகள் தோறும்
என் கண்விழிப்பு.
தலை துவட்டும்
கரங்களென தேடும் உன்
ஓரப்பார்வைக்கு தான்
வீதிகள் தோறும் என் காத்திருப்பு .
வெடித்துப்போன நிலமதை
ஒட்டவைக்கும் மழை போன்ற
உன் ஒற்றை வரி பதிலில் தானடி
இருக்கும் என் உயிர்த்துடிப்பு!
No comments:
Post a Comment