Monday, April 15, 2013

ஏதேனின் ஆப்பிள் !








என்னைத்தின்றதால் ஏவாள்களை சபித்தாய்
எதைத்தின்றதால் என்னை சபித்தாய்?
உந்தனது தோட்டத்தில் நீ தானே வளர்த்தாய்!
வளர விட்டு பூத்து காய்க்கவும் விட்டு
பாவத்தின் கனியென என்னை பிரகடனம் செய்தாயே
படைத்தவனே நான் செய்த குற்றம் தானென்ன?
பாலும் தேனுமூட்டி தலை தடவி வளர்த்து விட்டு
மாற்றான் மகன் நீயென விரட்டியடிக்கும் மானுடனாய்
படைத்தவனே நீயும் மாறினாயோ?
யாருக்குமே இன்றி கனிகள் அழுகி விழ
தன்னந்தனிமையில் புழுங்கித் தவிக்கின்றேன்
ஆறாய் உன்னை தேடி வரும்
என் கண்ணீர் துளிகளெல்லாம் கேட்கும் ஒரு கேள்வி
படைத்தவனே எனை ஏன் படைத்தாய்?



No comments:

Post a Comment